Home இலங்கை வடமராட்சியில் குண்டு வெடிப்பு – காவல்துறையினர்  காயம்.

வடமராட்சியில் குண்டு வெடிப்பு – காவல்துறையினர்  காயம்.

by admin

யாழ். வடமராட்சி கிழக்கு வல்லிபுர ஆலயத்தை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தின் போது  காவல்துறையினர்  ஒருவர் காயமடைந்துள்ளார்.  வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகில் உள்ள முச்சந்தியிலையே குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோத மண் அகழ்வுகள் , மண் கடத்தல்களை தடுக்கும் நோக்குடன் குறித்த பகுதியில் காவல்துறையினர்  சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டு வருவதுடன் , குறித்த சந்தி பகுதியில் நின்று வீதி சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவது வழமையாகும்.
இந்நிலையில் இன்றைய தினமும் வழமையான வீதி சோதனை நடவடிக்கைக்காக குறித்த சந்திப்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் காவல்துறையினர் வந்திறங்கிய போது நிலத்தில் இருந்த வெடிபொருள் ஒன்று வெடித்ததிலையே காவல்துறையினர் காயமடைந்துள்ளார்.
அதேவேளை வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வயர்கள் உள்ளிட்ட பொருட்களும் காணப்படுகின்றன.  சம்பவம் தொடர்பில்  காவல்துறையினர்  தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், இராணுவத்தினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த வெடிபொருள் மிதிவெடியாக இருக்கலாம் எனவும் , சட்டவிரோத மண் அகழ்வோர் காவல்துறையினரை இலக்கு வைத்து அதனை அவ்விடத்தில் புதைத்து வைத்திருக்கலாம் என காவல்துறையினர்சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் பின்னரே முழுமையான தகவல்களை  வழங்க முடியும் என காவல்துறையினர்  தெரிவித்தனர்.   #வடமராட்சி  #குண்டுவெடிப்பு  #காவல்துறையினர்  #காயம்
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More