Home இலங்கை திருமணமான 9 நாட்களில் மனைவியின் கழுத்தை திருகி கொலை

திருமணமான 9 நாட்களில் மனைவியின் கழுத்தை திருகி கொலை

by admin


மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் மனைவியின் கழுத்தை கயிற்றால் திருகி கொன்ற சம்பவம் தொடமர்பில் கணவனை கைது செய்துள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஏறாவூர் ஜயங்கேணி ஜின்னா வீதியைச் சேர்ந்த 24 வயதான அப்துல் காதர் ஷியாமியா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து 27 வயதான கணவனான ஹலால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் மனைவியின் கழுத்தை கணவன் கயிற்றால் திருகியதனால் அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துளளதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் 09 நாட்களுக்கு முன்னரே திருமணம் செய்து கொண்டனர் எனவும் கொழும்பு – ஊறுகொடவத்தையைப் பிறப்பிடமாகக் கொண்ட சந்தேகநபர், ஏறாவூரில் ஏற்கனவே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து ஒரு குழந்தையொன்றுக்குத் தந்தையான நிலையில், முதல் மனைவியை விவாகரித்துச் செய்து, தற்போது கொலைசெய்யப்பட்ட பெண்ணை மணம் முடித்துள்ளார் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. #மனைவி #கொலை #ஏறாவூர் #கணவன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More