Home இந்தியா இந்தியாவில் கொரோனாவினால் 24 மணி நேரத்தில் 9851 பேருக்கு பாதிப்பு – 273 பேர் மரணம்

இந்தியாவில் கொரோனாவினால் 24 மணி நேரத்தில் 9851 பேருக்கு பாதிப்பு – 273 பேர் மரணம்

by admin

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.26 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், 1,09,462 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றதனையடுத்து அங்கு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த யூன் 30 வரை ஊரடங்கு நீ;டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெறுகின்றன.

பொருளாதார நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வடைகின்றது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகின்றது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 2,26,770 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 9851 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 273 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6348 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 1,09,462 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,10,960 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 77 ஆயிரத்தை தாண்டியது. மொத்தம் 77793 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 27256 பேருக்கும், டெல்லியில் 25004 பேருக்கும், குஜராத்தில் 18584 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. #இந்தியா #கொரோனா #மரணம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More