Home இலங்கை கொரோனாவிடம் தோல்விகண்ட இலங்கை அரசாங்கம், பிச்சை எடுக்கிறது…

கொரோனாவிடம் தோல்விகண்ட இலங்கை அரசாங்கம், பிச்சை எடுக்கிறது…

by admin

இலங்கையில் கொரோனா ஒழிப்பு தோல்வியடைந்துள்ளதாகவும், அதற்கன பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் எனவும்,  முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

.கொரோனா தொற்று ஆரம்பமான சந்தர்ப்பத்தில், அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதென எதிர்க்கட்சி தீர்மானித்தது என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் நாளாந்தம் ஐயாயிரம் PCR பரிசோதனைகளை நடத்துமாறு கூறியதாகவும்,  ஆயினும் பெப்ரவரி 18ஆம் திகதியிலிருந்து இதுவரை 75,239 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதெனவும், அரசியல் இலாபம் பெறும் நோக்கம் மாத்திரமே அரசாங்கத்திற்குக் காணப்பட்டதாகவும் முன்னாள் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிச்சைக்காரர்களைப் போன்று, பாகிஸ்தான் , சீனா மற்றும் இந்தியாவினால் வழங்கப்பட்டதை பெற்றதோடு மாத்திரம் வரையறைப்படுத்திக் கொண்ட அரசாங்கம் முகக்கவசங்களை கூட கொள்வனவு செய்யவில்லை எனவும், உலக வங்கியினால் 230 மில்லியன் டொலர் இலங்கைக்கு வழங்கப்பட்டதாக  அந்த 230 மில்லியன் டொலருக்கு என்ன நடந்தது எனவும், ரணில் விக்ரமசிங்க  கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை மதுபான உற்பத்தி நிறுவனங்கள் பழைய மதுபானங்களை விற்றுள்ளதாக தெரிவிக்கும் முன்னார் பிரதமர், இவையனைத்திற்கும் அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் எனவும்  அமைச்சரவையின் பொறுப்புக்கூறலையும் நினைவூட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More