Home உலகம் ஆர்டிக் பகுதியில் டீசல் கசிவு – நன்னீர் ஏரியை மாசுபடுத்தியுள்ளது – ஆர்டிக் பெருங்கடலுக்கும் பரவும் அபாயம்

ஆர்டிக் பகுதியில் டீசல் கசிவு – நன்னீர் ஏரியை மாசுபடுத்தியுள்ளது – ஆர்டிக் பெருங்கடலுக்கும் பரவும் அபாயம்

by admin

ரஸ்யாவின் ஆர்டிக் பகுதியில் உள்ள ஆறு ஒன்றில் சுமார் 20,000 தொன் டீசல் கசிந்ததை அடுத்து, அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புதின் அவசரநிலையை பிறப்பித்திருந்த நிலையில், தற்போது அந்த டீசல் கசிவு நன்னீர் ஏரி ஒன்றை மாசுபடுத்தியுள்ளது. மேலும், இந்த டீசல் கசிவு ஆர்டிக் பெருங்கடலுக்கும் பரவும் அபாயம் காணப்படுவதாக ரஸ்ய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று ரஸ்யாவின் நோரில்ஸ்க் நகரத்துக்கு அருகிலுள்ள மின்னுற்பத்தி நிலையத்தில் இருக்கும் எரிப்பொருள் தொட்டி சேதமடைந்தபோது இந்த கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தற்போது அம்பர்ன்யா நதி மற்றும் அதன் சுற்றியுள்ள நிலப்பரப்பில் 21 ஆயிரம் தொன் எண்ணெய் கலந்துள்ளதாகவும் 20 கிலோ மீற்றர் தூரம் வரை பரவியிருக்கும் இந்த கசிவை கட்டுப்படுத்த அவசர நிலைக்குழுக்கள் முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த எண்ணெய் கசிவு நீர் ஆதாரங்களை பாதிப்பதோடு, இதனைக் குடிக்கும் விலங்குகள், கரையில் வளரும் செடி கொடிகள் ஆகியவை மீதும் தாக்கத்தை உண்டாக்கும் எனவும் சூழலியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  #ஆர்டிக் #டீசல்கசிவு #நன்னீர்ஏரி  #ஆர்டிக்பெருங்கடல் #அபாயம் #ரஸ்யா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More