Home இலங்கை மூன்று நாட்களாக நடுக்கடலில் தத்தளித்த ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்பு

மூன்று நாட்களாக நடுக்கடலில் தத்தளித்த ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்பு

by admin
விசைப்படகு பழுதானதால் கடந்த மூன்று நாட்களாக நடுக்கடலில் தத்தளித்த நான்கு ராமேஸ்வரம்  மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை விசாரணைக்கு பின் பழுதான விசைப்படகுடன் மீனவர்கள் நால்வரையும் பத்திரமாக இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைத்தனர்.
ராமேஸ்வரத்ததை சேர்ந்த கிருஸ்ணவேணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த செல்வகுமார், பசீர், அண்ணாதுரை, சீனி ஆகிய நான்கு மீனவர்கள் கடந்த சனிக்கிழமை காலை ராமேஸ்வரம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
மீனவர்கள் சனிக்கிழமை இரவு நடுக்கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த போது விசைப்படகின் இஞ்சினில் இயந்திர கோளாறு ஏற்பட்டு படகு நடுக்கடலில் பழுதாகியது. இதனால் படகில் இருந்த மீனவர்களால் கரைக்கு திரும்ப முடியாமல் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர். அப்போது விசைப்படகு கடல் சீற்றம் காரணமாக இலங்கை பகுதியான மன்னார் கடல் பகுதிக்குள் சென்றது.
இந்த நிலையில் ஞாயிற்றுகிழமை மாலை அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களையும், படகையும் மீட்டு சர்வ தேச கடல் எல்லையில் வைத்து விசாரணை நடத்தி பின் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ராணி துர்க்கா தேவி என்ற ரோந்து கப்பலில் மீனவர்களையும் விசைப்படகையும் ஒப்படைத்தனர்.
  ஒப்படைக்கப்பட்ட நான்கு  மீனவர்களையும், படகையும் இந்திய கடலோர காவல்படை கப்பல் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே வைத்து இன்று திங்கட்கிழமை மாலை சக மீனவர்களிடம் ஒப்படைத்தனர்.  பின் கரைக்கு அழைத்து வரப்பட்ட மீனவர்களிடம் உளவுத்துறை, வட்டாச்சியர், கடலோர காவல் குழுமம் மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.   #விசைப்படகு #ராமேஸ்வரம்  #மீனவர்கள் #கடற்படை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More