84
நாட்டு வெடிபொருள் தயாரித்த ஒருவர், வெடிவிபத்து ஏற்பட்டு படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இயக்கச்சியில் இடம்பெற்றது என்று பளை காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த தங்கராசா தேவதாசன் (வயது-43) என்பவரே படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மீன் ரின்னுக்குள் சி4 வெடிமருந்தைப் பயன்படுத்தி நாட்டு வெடிபொருள் செய்த போதே வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என்று பளை காவல்துறையினர் கூறினர். #வெடிவிபத்து #வெடிபொருள் #கிளிநொச்சி



Spread the love