Home இலங்கை பல்கலைக்கழக 2ம் 3ம் ஆண்டு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கான திகதியை துணைவேந்தர்களே தீர்மானிக்கலாம்

பல்கலைக்கழக 2ம் 3ம் ஆண்டு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கான திகதியை துணைவேந்தர்களே தீர்மானிக்கலாம்

by admin

அனைத்து பல்கலைக்கழகங்களின் 2ம் 3ம் ஆண்டு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கான திகதியை குறித்த பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களே தீர்மானிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், 11 சுகாதார நிபந்தனைகளுக்கு அமைவாக பல்கலைக்கழகங்களை திறப்பது குறித்து துணை வேந்தர்கள் இன்று முதல் தீர்மானிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அனைத்து பல்கலைக்கழகங்களின் முதலாம் ஆண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான எந்த ஒரு இறுதி முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பல்கலைக்கழக மாணவர்கள் விளையாட்டு, சமூகபணி அல்லது வேறு எந்த கூட்டங்களிலும் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #பல்கலைக்கழக  #கல்விநடவடிக்கை  #துணைவேந்தர்கள்  #பல்கலைக்கழகமானியங்கள்ஆணைக்குழு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More