Home இலங்கை தனியார் வகுப்பிற்கு சென்ற பெண்களை சீண்டியதை நியாயம் கேட்கச்சென்ற இருவர் காயம்

தனியார் வகுப்பிற்கு சென்ற பெண்களை சீண்டியதை நியாயம் கேட்கச்சென்ற இருவர் காயம்

by admin

தனியார் வகுப்பிற்கு சென்ற பெண்களை சீண்டியதை நியாயம் கேட்கச்சென்ற இருவர் காயமடைந்த நிலையில் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் அமைந்துள்ள தனியார் பிரத்தியேக வகுப்பிற்கு சம்மாந்துறை பகுதியில் இருந்து பெண்கள் வருகை தருகின்ற நிலையில் இவ்வாறு வரும் பெண்களை தொடர்ச்சியாக வீதியில் நின்று சில இளைஞர்கள் சீண்டி வருவதாக தமது நண்பர்கள் உறவினர்களிடம் முறையிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (7) வழமை போன்று குறித்த பெண்கள் தனியார் வகுப்பிற்கு செல்கின்ற போது வீதியில் நின்ற இளைஞர்கள் சீண்டியுள்ளனர்.

இதனால் குறித்த பெண்களுடன் சம்மாந்துறை பகுதியில் இருந்து வந்தவர்களுக்கும் சாய்ந்தமருது பகுதியில் பெண்களை சீண்டியவர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டு  கைகலப்பு ஏற்பட்டது. இக்கைகலப்பினால் இருவர் காயமடைந்த நிலையில் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இத்தாக்குதலில் பெண்களுடன் வருகை தந்த சம்மாந்துறை பகுதியை சேர்ந்த 17 ,18 வயதினை உடைய இருவரே  காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெறறு வருகின்றனர். சம்பவம் தொடர்பாக கல்முனை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #தனியார்வகுப்பிற்கு  #பெண்களை #நியாயம்  #காயம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More