Home இலங்கை முன்பள்ளி பாடசாலைகள் முறைமை அமைச்சு ஒன்றின் கீழ்.…..

முன்பள்ளி பாடசாலைகள் முறைமை அமைச்சு ஒன்றின் கீழ்.…..

by admin

 

முன்பள்ளி பாடசாலைகள் முறைமையினை அமைச்சு ஒன்றின் கீழ் கொண்டு வந்து பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி  கோத்தாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

கடந்த சில தினங்களாக ஜனாதிபதி   சுற்றுப் பயணம் மேற்கொண்ட அனைத்து மாவட்டங்களிலும் முன்பள்ளி பாடசாலைகளில் ஆசிரியர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் அவரது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. சென்ற வியாழக்கிழமை காலியில் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின்போது முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்கள் தமது பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடினர்.

இது குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி , முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்க திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் முக்கிய பணியாக கருதி முன்பள்ளி பாடசாலைகள் முறைமையை அமைச்சு ஒன்றின் கீழ் கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி  தெரிவித்தார்   என தெரிவிக்கப்பட்டுள்ளது #முன்பள்ளி   #பாடசாலைகள் #அமைச்சு #கோத்தாபய 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More