Home இலங்கை வடமராட்சி கிழக்கில் மீனவரைக் காணவில்லை….

வடமராட்சி கிழக்கில் மீனவரைக் காணவில்லை….

by admin

வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கடற்பரப்பில் மீன்பிடிப் படகு ஒன்று கவிழ்ந்ததில் தொழிலுக்குச் சென்ற இரண்டு மீனவர்களில் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் மற்றொருவரைக் காணவில்லை. அவரைத் தேடும் பணியில் கடற்படையினர், மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வடராட்சி கிழக்கு, கட்டைக்காடு கடற்பரப்பில் இன்று அதிகாலை படக்கு ஒன்றில் இரண்டு மீனர்கள் தொழிலுக்குச் சென்றனர். கடலில் ஏற்பட்ட பலத்த காற்றினால் அவர்கள் சென்ற படகு கவிழந்துள்ளது. அதனால் கடலில் தந்தளித்த அவர்களை மீட்க மீனவர்கள் நடவடிக்கை எடுத்தனர்.எனினும் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

அவர் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளார். கவிழ்ந்த படகும் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மற்றைய மீனவர் காணாமல் போயுள்ள நிலையில் அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More