Home உலகம் நஜீப் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டுள்ளது

நஜீப் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டுள்ளது

by admin

முன்னாள் மலேசியப் பிரதமர் நஜீப் துன் ரசாக் பதவியில் இருந்தபோது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. மலேசிய அபிவிருத்தி வாரியத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டு அதிகளவு சொத்துக் குவித்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இதனயைடுத்து அவருக்கு சொந்தமான கட்டடங்களில் மலேசிய ஊழல் தடுப்புப் படையினர் மேற்கொண்ட சோதனை நடலடிக்கைகளின்போது 273 மில்லியன் டொலர் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டிருந்தன.

இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் அவருடைய 408 வங்கிக் கணக்குகளையும் முடக்கி வைத்திருந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் இன்று அவர் தமது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது    #நஜீப்  #அதிகாரத்தை #மலேசியப்பிரதமர் #முறைகேடாக

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More