Home இலங்கைபதிவு செய்துள்ள ஊடகங்களே தோ்தல் முடிவினை அறிவிக்கலாம்

பதிவு செய்துள்ள ஊடகங்களே தோ்தல் முடிவினை அறிவிக்கலாம்

by admin

2020 பாராளுமன்ற பொதுத் தேர்தல் வாக்குகளை எண்ணும் பணி 6 ஆம் திகதி காலை 7 மணிக்கு அல்லது 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் சுயேட்சைக்குழுக்கள் சார்பில் முகவர்களை நியமிப்பது குறித்து வர்த்தமானி அறிவிப்பு தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் கொடுப்பனவு செலுத்தி பதிவு செய்துள்ள இலத்திரனியல் ஊடக நிறுவனங்களுக்கு மாத்திரமே 2020 பாராளுமன்ற பொதுத் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகளை அறிவிப்பதற்கான அனுமதியை தேர்தல் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

இந்த நிலையில், தற்சமயம்  பிரதான ஊடக நிறுவனங்கள் சில இதற்கான பதிவை மேற்கொண்டுள்ளதாக தேர்தல் திணைக்களம்   வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. #ஊடகநிறுவனங்கள்  #பொதுத்தேர்தல் #வாக்குகள் #வர்த்தமானி #தேர்தல்திணைக்களம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More