Home இலங்கையாழில் யுவதி வெள்ளைவானில் கடத்தல்

யாழில் யுவதி வெள்ளைவானில் கடத்தல்

by admin

 

யாழ் நீர்வேலி வடக்கில்  யுவதி ஒருவா் வெள்ளை வானில் வந்த இனம் தெரியாதோரால்   கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக  காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் நேற்று (09)  இடம்பெற்றுள்ளது.

வெள்ளை வானில் வந்த நான்கு பேர் கொண்ட இனம் தெரியா குழுவினா் நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றினுன் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்களை தாக்கியுள்ளதுடன்,  வீட்டில் இருந்த 20 வயது யுவதியை பலாத்காரமாக கடத்திச் சென்றுள்ளதாக  உறவினா்கள் கோப்பாய்  காவல் நிலையத்தில் முறைப்பாடு  செய்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய்  காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். #யாழ்  #யுவதி  #வெள்ளைவான் #கடத்தல் #நீர்வேலி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More