Home இலங்கை ஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த ஐவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த ஐவர் கைது

by admin

ஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை  காவல்துறைஎல்லைக்குட்பட்ட  நிந்தவூர் பகுதியில்  உள்ள வீடு ஒன்றில்  சட்டவிரோதமாக ஹெரோயின் போதைப்பொருள்களை பொதி செய்து கொண்டிருப்பதாக 11.8.2020 அன்று இரவு   சம்மாந்துறை  காவல் நிலைய  பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்திற்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது.

இதற்கமைய சம்மாந்துறை காவல் நிலைய  பொறுப்பதிகாரியின்  வழிகாட்டலுக்கமைய  சம்மாந்துறை காவல் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா   தலைமையிலான உப காவல் துறைபரிசோதகர் ஜனோசன்    குழுவினர்  மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக போதைப்பொருளை பொதி செய்த நிலையில் ஐவர் கைதாகினர்.

இவ்வாறு கைதானவர்கள் 25 வயது முதல் 30 வயதுடையவர்கள் எனவும் சுமார் 1 கிராமிற்கு அதிகமான   பொதி செய்யப்பட்ட போதைப்பொருள் பக்கெட்டுக்களும்  மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த போதைப்பொருளை பனடோல் மாத்திரையுடன் கலந்து பொதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் காவல்துறையினா்    குறிப்பிட்டனர்.

மேலும் மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் சந்தேக நபர்களை இன்று(11)    சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில்  பாரப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது  #ஹெரோயின் #போதைப்பொருள் #கைது

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More