Home இலங்கை ஹெரோயின் வர்த்தகர்கள் 5 பேர், வடக்கில் கைது..

ஹெரோயின் வர்த்தகர்கள் 5 பேர், வடக்கில் கைது..

by admin



யாழ்ப்பாணம் காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட கொக்குவில் மற்றும் இளவாழை பிரதேசங்களில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (23.08.20) பிற்பகல் யாழ்ப்பாணம் காவல் நிலைய அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து 67 கிராம் 519 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

21 முதல் 38 வயதுக்கிடைப்பட்ட சந்தேகநபர்கள் இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More