Home இலங்கை இந்தியா ஒரு முறை சீற்றமடைந்தால் இவர்கள் அடங்கி விடுவாா்கள்

இந்தியா ஒரு முறை சீற்றமடைந்தால் இவர்கள் அடங்கி விடுவாா்கள்

by admin

மாகாண சபை முறைமையே நாட்டின் தேசிய பிரச்சினைக்குத்  தீர்வு தரக்கூடிய சரியான முறையெனத் தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் ஹிருணிகா பிரேமசந்திர, மாகாண சபை முறையை முற்றாக ஒழித்துக்கட்டுவதற்கு, இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகரவால் முடியாது எனத் தொிவித்துள்ளாா்.

இலங்கைக்குள் மாகாண சபை முறையை ஒழித்துக்கட்டுவதாகக் தொிவித்தாலும் இந்தியா ஒரு முறை சீற்றமடைந்தால், இவர்கள் அடங்கி விடுவர் எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.  

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவா் இதனைத் தொிவித்துள்ளாா்.

அரசாங்கம், 13ஆவது திருத்தத்தை நீக்கிவிட்டு, மாகாண சபை​ முறையை முற்றாகத் து​டைத்தெறிய முயற்சிப்பதாகக் கூறிக்கொண்டிருந்தாலும்,  இந்தியாவைப் பகைத்துக்கொள்ள அரசாங்கம் ஒருபோதும் முயற்சிக்காது எனவும் அவா் தெரிவித்துள்ளார். 

இலங்கையின் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கிலேயே 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டுமென்ற இணக்கப்பாடு இந்தியாவுடன் எட்டப்பட்டதெனத் தெரிவித்த அவர், மாகாண சபைகள் அவசியமில்லை எனக் கூறும் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர போன்றவர்கள், நாட்டில் தேசிய பிரச்சினை இன்றும் முடிவுக்கு வரவில்லை என்பதை மறந்துவிட்டனர் எனவும் குறிப்பிட்டுள்ளாா்.

எவ்வாறாயினும், மக்கள் மத்தியில் பிரச்சினையொன்று நிரந்தரமாக​வே இருக்க வேண்டுமென்ற நோக்கம், நாட்டின் அரசியல்வாதிகளுக்கு உள்ளதெனவும், அவ்வாறான பிரச்சினைகள் நீடித்தால் மாத்திரமே  அவர்களால் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் எனவும் சாடினார்.

எவ்வாறாயினும், 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டியது அவசியமென்ற நிலைப்பாட்டிலேயே ஐக்கிய மக்கள் சக்தி உள்ளதெனத் தெரிவித்த அவர்,  அதனூடாக நாட்டின் சகல மாகாணங்களுக்கும் ஒரே அளவிலான அதிகாரப் பகிர்வை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

1980களில் ஏற்பட்ட இனக்கலவரங்களைப் போன்று, புதிய கலவரங்களைத் தோற்றுவிக்கவே மாகாண சபை முறைமையை நீக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என குற்றம் சுமத்தியுள்ள அவா் , மாகாண சபைகள் முறைமை வெள்ளை யானை ஆவதற்கு அதன் பணியாளர்களும் அதற்குத் தெரிவான உறுப்பினர்களுமே காரணமென்றும் தொிவித்துள்ளாா். #மாகாணசபை #ஹிருணிகா #சரத்வீரசேகர #இந்தியா

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More