Home இலங்கை அண்ணனையும், நாடாளுமன்றையும் முடமாக்கிய தம்பி….

அண்ணனையும், நாடாளுமன்றையும் முடமாக்கிய தம்பி….

by admin

20 ஆவது அரசியல் அமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (03) வெளியிடப்பட்டது.

அதில் அடங்கியுள்ள சில விடயங்கள் …

19 ஆவது அரசியலமைப்பில் எஞ்சிய சில விடயங்கள்.

தகவல் அறியும் உரிமை

ஜனாதிபதிக்கு இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது.

ஜனாதிபதியினதும், பாராளுமன்றத்தினதும் ஆயுட் காலம் 5 வருடங்களாகும்.

மேற்குறித்த விடயங்கள் மாத்திரம் 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய விடயங்கள் நீக்கப்பட்டுள்ளன.

19 ஆவது திருத்தத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பு சபை நீக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் உரிமையும் நீக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர், உயர் நீதிமன்ற நீதியரசர்கள், மேன்முறையீட்டு நீதிமன்ற தவிசாளர் மற்றும் நீதிபதிகள், சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர், கணக்காய்வாளர், ஒம்புட்ஸ்மென் உள்ளிட்ட பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

19 ஆம் திருத்தத்திற்கமைய நான்கரை வருடங்களில் பாராளுமன்ற காலத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும்.

ஆனால் புதிய திருத்தத்திற்கு அமைய பாராளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு வருடத்தின் பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் காணப்படுகிறது.

மேலும் அமைச்சர்கள் நியமனத்தின் போது பிரதமரின் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சரத்து நீக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆகவும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களின் எண்ணிக்கை 40 க்கு மேல் அதிகரிக்க கூடாது என்ற சரத்து நீக்கப்பட்டுள்ளது.

19 ஆவது அரசியல் அமைப்பில் இரட்டை குடியுரிமை கொண்ட ஒருவருக்கு பாராளுமன்றம் செல்ல முடியாது என்ற சரத்து 20 ஆவது அரசியல் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு, பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களை நீக்கவும், அவர்களுக்குள்ள விடயதானங்களை தன்னிடம் வைத்துக்கொள்ள முடியும்.

ஜனாதிபதிக்கு குறித்த ஒரு விடயதானத்தையும் அதனுடன் சம்பந்தப்பட்ட விடயத்தையும் தன் வசம் வைத்துக்கொள்வதற்கான இயலுமை உள்ளது.

ஜனாதிபதிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு மூன்று உறுப்பினர்களை நியமிக்க முடியும் என்பதோடு அதில் ஒருவரை தலைவராக நியமிக்கவும் வாய்ப்புள்ளது.

19 ஆவது அரசியல் அமைப்பில் 35 வயதுக்கு மேற்பட்டவர்களே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும். 20 ஆவது திருத்தத்தில் அந்த வயதெல்லை 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

20 ஆவது சீர் திருத்தத்தில் ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் செல்ல முடியாது.

இவ்வாறு 19 ஆவது திருத்தத்தில் உள்ள ஜனநாயகத்தை பலப்படுத்தும் பல முக்கிய விடயங்கள் நீக்கப்பட்டு, 1978ஆம் ஆண்டு ஜே. ஆரின் இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பை நோக்கி 20ஆம் திருத்தம் பின்னோக்கிச் சென்றுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More