Home இலங்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாடலுக்கு, கிர்கிஸ்தான் – கசகஸ்தான் நேபாள சிம் அட்டைகள் பயன்படுத்தப்பட்டன..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாடலுக்கு, கிர்கிஸ்தான் – கசகஸ்தான் நேபாள சிம் அட்டைகள் பயன்படுத்தப்பட்டன..

by admin

உயிா்த்தஞாயிறுத் தாக்குதலின் பின்புலத்தில் மறைமுக சக்தியொன்று உள்ளதனை, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பயன்படுத்திய சிம் அட்டைகளும் உறுதிப்படுத்துவதாக முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், உயிா்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது நாளாக நேற்றையதினம் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த போதே அவா் இதனைத் தொிவித்துள்ளாா்.

நேற்று முன்தினம் ஆணைக்குழு முன்னிலையில் உயிா்த்தஞாயிறு தாக்குதலின் பின்புலத்தில் மறைமுக சக்தியொன்று இயங்கியதாக சாட்சியமளித்த ஹக்கீம், குறித்த மறைமுக சக்தியே சஹரான் உள்ளிட்ட குழுவினருக்கு தாக்குதலுக்கான நிதி உதவியை வழங்கியதாக நேற்றையதினம் குறிப்பிட்டுள்ளாா்.

பயங்கரவாதிகள் பயன்படுத்திய சில சிம் அட்டைகள் நேபாளம், கிர்கிஸ்தான் மற்றும் கசகஸ்தான் ஆகிய நாடுகளுக்குரியவை எனக் குறிப்பவிட்டுள்ள அவா் அதிகாரிகளின் கவனத்திற்குட்படாத வகையில் இத்தகைய சிம் அட்டைகளை பெற்றுக்கொள்வதற்கு பாரிய உந்துசக்தியாக யாரேனும் செயற்பட்டிருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளாா்.

தாக்குதலின் பின்புலத்தில் வௌித்தரப்பு சக்தியொன்று இருந்ததா என மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கேட்டதிற்கு பதிலளித்த ஹக்கீம், கட்டாயமாக வௌித்தரப்பு சக்தியொன்று உள்ளது எனவும் இவ்வாறு திட்டமிட்ட வகையில் படுகொலையை புரிவதற்கு உள்ளக ஒத்துழைப்பினால் மாத்திரம் முடியாது எனவும் தொிவித்துள்ளாா்.

மேலும் குறித்த வௌித்தரப்பு சக்தியை அடையாளப்படுத்த முடியாது எனவும் அதனை கண்டுபிடிக்க வேண்டியது புலனாய்வுத் துறையின் பொறுப்பு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சஹரான் ஐஎஸ்பயங்கரவாத அமைப்புடன் நேரடியாக தொடர்புபடவில்லை என தான் ஏற்கனவே தெரிவித்தமையை நினைவுகூர்ந்து சாட்சியமளித்த அவா், தாக்குதல் நடைபெற்றதன் பின்னர் அப்போதைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிக்காவல்துறை மா அதிபர் ரவி செனவிரத்ன, இந்த தாக்குதல் ஐஎஸ் பயங்கரவாதிகளால் நடத்தப்படவில்லை என நம்புவதாக மறைமுகமாக கூறியதாகவும் தொிவித்துள்ளாா்

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க சஹரான் கடும்போக்கான மதப் பிரசாரங்களை மேற்கொள்ளும் காணொளியொன்றை தமக்கு அனுப்பி வைத்து இது நாட்டிற்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதால், அதனை ஆராயுமாறு கோரிக்கை விடுத்ததாக விடுத்ததாகவும் அது இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்ட ஒன்று எனவும் ஹக்கீம் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

சஹரான் மற்றும் அவரது குழுவை கைது செய்வதற்காக 50 குழுக்களை ஈடுபடுத்தியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அப்போதைய பணிப்பாளர் ஷானி அபேசேகர தெரிவித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளாா். #உயிா்த்தஞாயிறு #சிம்அட்டைகள் #நேபாளம் #கிர்கிஸ்தான் #சஹரான்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More