Home இலங்கை நக்ல்ஸில் 05 ஏக்கருக்கும் அதிகமான காடு அழிப்பு..

நக்ல்ஸில் 05 ஏக்கருக்கும் அதிகமான காடு அழிப்பு..

by admin

சுற்றாடல் சட்டங்களை மீறி நக்ல்ஸ் வனப்பகுதியின் பன்வில மேல் பகுதியில் ஐந்து ஏக்கருக்கும் அதிகமான பகுதி அழிக்கப்பட்டுள்ளதாக நேற்று தெரியவந்தது.


மரக்கறி செய்கைக்காக இந்த வனப்பகுதி அழிக்கப்பட்டுள்ளதாக வனபாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதுவொரு தனியார் காணி என காட்டை அழித்தவர்கள் தெரிவித்ததாக வனபாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டனர். எனினும் அதற்கான எவ்வித ஆவணங்களையும் அவர்கள் முன்வைத்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சரணாலயத்திற்குள் தனியார் காணிகள் தொடர்பான தகவல்கள் இருந்தாலும், இந்தக் காணி தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லையென வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் பிரதேசத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுற்றாடல் பாதுகாப்பு அமைப்புக்கள் , மிகவும் உணர்திறான வலயத்தை அழிப்பது தொடர்பில் எவ்வித நிறுவனங்களுக்கும் அறிவிக்காமை அதிர்ச்சிக்குரிய விடயம் என தெரிவிக்கின்றன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More