Home இலங்கை 100 பக்கெட் ஹெரோயினுடன் ஒருவர் கைது

100 பக்கெட் ஹெரோயினுடன் ஒருவர் கைது

by admin

(க.கிஷாந்தன்)

100  பக்கெட் ஹெரோயினுடன் 30 வயதுடைய நபரொருவர் இன்று (14.09.2020) காலை கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஹாலி எல காவல்துறையினா் தெரிவித்தனர்.

100 பக்கெட் ஹெரோயினையும் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து – கொழும்பிலிருந்து பதுளைக்கு, பொதுபோக்குவரத்தில் எடுத்துக்கொண்டு வருகையில் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பதுளை நகருக்கு அருகாமையில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை, கடுபெல்லகம பகுதியைச் சேர்ந்த இவர், 8 வீடுகளை உடைத்து கொள்ளையடித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும், தலைமறைவாகி தற்போது கொழும்பு நவகமுவ பகுதியில் இருந்து ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார் எனவும் காவல்துறையினா் தெரிவித்தனர்.

வெல்லம்பிட்டியவில் இருந்து இவரே பதுளைக்கு ஹெரோயின் கடத்துகிறார். இது தொடர்பில் ஹாலிஎல காவல்துறையினா் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். #பதுளை #ஹெரோயின் #கைது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More