அமெரிக்காவில் வீசா காலம் நிறைவு பெற்ற பின்னரும் தங்கியிருந்த இலங்கையர் 18 பேர் அங்கிருந்து திருப்பியனுப்பட்டுள்ள நிலையில் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி 18 பேரும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும், அவர்களுக்கான 21 நாள் தனிமைப்படுத்தல் காலம் நிறைவுற்றதன் பின்னர் அவர்களிடம் குற்றப்புலனாய்வுத்துறையினா் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #அமெரிக்கா #வீசா #இலங்கையர் #கட்டுநாயக்கவிமானநிலையம்