Home உலகம் உலக சுகாதார நிறுவன பணியாளர்களின் பாலியல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை

உலக சுகாதார நிறுவன பணியாளர்களின் பாலியல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை

by admin

உலக சுகாதார நிறுவனம் தனது உதவிப் பணியாளர்கள் மீதான பாலியல் முறைப்பாடுகள் குறித்து விசாரிப்பதாக உறுதியளித்துள்ளது.

கொங்கோ ஜனநாயக குடியரசில் இபோலா வைரஸ் பரவிய சமயத்தில் அங்கு பணியாற்றிய உலக சுகாதார நிறுவனத்தின் ஊழியர்கள் அந்நாட்டு பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தி உள்ளனர் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு செய்தி நிறுவனங்கள் இது தொடர்பாக நடத்திய விசாரணையில் உலக சுகாதார நிறுவனத்தின் ஊழியர்கள் மீது 50 பெண்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.

பெண்களுக்கு மதுபானம் கொடுத்து மருத்துவமனையில் வைத்து பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு உள்ளனர் எனவும் இதன் காரணமாக இரண்டு பெண்கள் கர்ப்பமாகி உள்ளனர் எனவும் அந்த விசாரணைகளில் தொிவிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு மார்ச் முதல் இந்தாண்டு வரை இந்தப் பாலியல் சுரண்டல்கள் நடந்ததாக அவர்கள் குற்றம்சுமத்தியுள்ளனா்.

நியூ ஹுமானிடேரியன் செய்தி நிறுவனம் மற்றும் தாம்ப்சன் ரொய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன் ஆகியவை இது தொடர்பாக கடந்த ஓராண்டாக விசாரித்து வருகின்றன.

இந்தநிலையில் இது தொடர்பாக உறுதியான விசாரணை நடைபெறும் என உலக சுகாதார நிறுவனம் தொிவித்துள்ளது. #உலகசுகாதாரநிறுவனம் #WHO #Congo #பாலியல்முறைப்பாடுகள் #கொங்கோ #இபோலா

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More