முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட குழுத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் கம்பஹா மாவட்டத்துக்குள் அவர் தனக்கு கீழ் செயற்பட வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதனாலேயே இவ்வாறு தான் விலகத் தீர்மானித்திருப்பதாக அவர் தொிவித்துள்ளார். #அர்ஜுனரணதுங்க #ஐக்கியதேசியகட்சி #கம்பஹா