Home இலங்கை சீன உயர்மட்ட குழுவினர் பிரதமருடன் சந்திப்பு!

சீன உயர்மட்ட குழுவினர் பிரதமருடன் சந்திப்பு!

by admin

முன்னாள் சீன வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான யெங் ஜியேச்சி (Yang Jiechi) தலைமையிலான சீன உயர்மட்ட குழுவினர் இன்று 2020.10.09 அலரி மாளிகையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவை சந்தித்தனர்.

உலகளாவிய கொரோனா தொற்றுக்கு மத்தியில் சீன அரசாங்கத்தின் உயர்மட்ட இராஜதந்திர குழுவினர் தெற்காசிய பிராந்தியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

கொவிட்-19 உலகளாவிய தொற்றுக்கு எதிராக போராடுதல் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துதல் ஆகிய துறைகளில் இலங்கை – சீன ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

எமது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கும்போது முதலீட்டாளர்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கையை நிலைநாட்டுவதற்கு சீன அரசாங்கத்துடனான எமது நீண்ட கால நட்பை பயன்படுத்திக் கொள்ள முடியும் என தான் நம்புவதாக அங்கு உரையாற்றிய பிரதமா் தொிவித்துள்ளாா்.

மேலும் கொவிட்-19 தொற்று தாக்கத்தின் பின்னர், அரசாங்கம் உலகளாவிய ரீதியில் முதலீடுகளை பெற்றுக் கொள்வதற்கு ஆர்வம் காட்டுவதுடன்,  அதில் கொழும்பு துறைமுக நகரத்திற்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

அதேவேளை சீனா கொவிட்-19 தொற்றை இல்லாதொழிப்பதற்கு தேவையான ஒத்துழைப்பை உலக சுகாதார அமைப்பிற்கு தொடர்ந்து வழங்குவதாகவும், இலங்கை கொவிட்-19 தொற்றை மிகவும் சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ளதாகவும் யெங் ஜியேச்சி குறிப்பிட்டார்.

கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட ஏனைய திட்டங்களுக்கான அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான எமது ஒத்துழைப்பு ஏற்கனவே இலங்கைக்கு கிடைத்துள்ளது. சுற்றுலாத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். கொவிட்-19 நிலைமை கட்டுப்படுத்தப்பட்டவுடன் உடனடியாக அந்த உறவு தொடர்ந்து நீடிக்கும் என நாம் நம்புகின்றோம். சீனா, இலங்கையின் உள்நாட்டு உற்பத்திகளின் இறக்குமதியை அதிகரித்துள்ளதாகவும் அவா் குறிப்பிட்டார்.


குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, நாமல் ராஜபக்ஷ, விமல் வீரவங்ச, பந்துல குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பவித்ரா வன்னிஆராச்சி, இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, சீனாவிற்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கொஹொன உள்ளிட்ட சீன உயர்மட்ட குழுவினர் பலர் கலந்து கொண்டனர். #சீன #உயர்மட்ட #பிரதமர் #சந்திப்பு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More