Home இலங்கை இனந்தெரியாதோா் வைத்த தீயினால் மோட்டார் சைக்கிள்கள் – துவிச்சக்கரவண்டிகள் எரிந்து சேதம்

இனந்தெரியாதோா் வைத்த தீயினால் மோட்டார் சைக்கிள்கள் – துவிச்சக்கரவண்டிகள் எரிந்து சேதம்

by admin

இனந்தெரியாதவர்கள் வைத்த தீயினால் 3 மோட்டார் சைக்கிள் உட்பட 5 துவிச்சக்கரவண்டிகள் எரிந்து சேதமடைந்துள்ளன.

அம்பாறை மாவட்டம் கல்முனை காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட கிறின் பீல்ட் தொடர்மாடி குடியிருப்பில் சனிக்கிழமை(16)  அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாதோரினால் உள்ள வீட்டுத்தொகுதியின் முன்னால் தரித்துவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் துவிச்சக்கரவண்டிகள் என்பனவைகளே இத்தீ அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் இத்தாக்குதலினால்   பாதிப்புக்குள்ளான  இடத்தில் மின்சார மின்மானிகள் சேதமடைந்த போதிலும் மின்கசிவு  ஏற்படவில்லை.

மேலும் இவ்வீட்டுத்திட்ட குடியிருப்பில்  மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்    தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்முனை காவல்நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறைபொறுப்பதிகாரி ஏ. எல். முஹம்மட் ஜெமில் தலைமையில் காவல்துறைக்குழுவொன்று சம்பவ இடத்திற்கு சென்று முன்னெடுத்துள்ளனர்.

 குறித்த வீட்டுத்தொகுதியில் இனந்தெரியாத நபர்களில் சிலர் திடீரென உட்புகுந்து இத்தீயினை வைத்து தப்பி சென்றதாக குடியிருப்பில் வசிக்கும் மக்கள் தெரிவித்தனர் #இனந்தெரியாதோா் #மோட்டார்சைக்கிள் #துவிச்சக்கரவண்டிகள் #சேதம் #தொடர்மாடி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More