Home இலங்கைகொழும்பு பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது

கொழும்பு பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது

by admin

கொரோனா தொற்றுப் பரவலால் கொழும்பு நகரம் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 5 நாட்களில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 1083 கொரோனாத் தொற்றாளா்கள் பதிவாகியுள்ள நிலையில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் இயக்குனா் வைத்தியர் ஹரித அளுத்கே தொிவித்துள்ளாா்

முன்பு கம்பஹா மாவட்டத்தில் காணப்பட்ட அச்சுறுத்தல் நிலைமை தற்போது கொழும்பு மாவட்டத்தில் காணப்படுகின்றது எனத் தொிவித்துள்ள அவா் விசேடமாக அண்மைய நாட்களில் கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் மாத்திரம் 200 க்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளா்ா.

இதனால் புதிய அவதான வலயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது எனவும் கட்டட நிர்மாண பணிகள் இடம்பெறும் இடங்கள் தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தப்பட வேண்டியுள்ளது எனவும் அவா் சுட்டிக்காட்டியுள்ளாா் #கொரோனா #கொழும்பு #அச்சுறுத்தல் #அரசவைத்தியஅதிகாரிகள்சங்கம் #ஹரிதஅளுத்கே

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More