Home இலங்கை வினோ நோகராதலிங்கம் மீது தாக்குதல் முயற்சி -மூவா் கைது

வினோ நோகராதலிங்கம் மீது தாக்குதல் முயற்சி -மூவா் கைது

by admin

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகராதலிங்கம் மீது வவுனியா கற்பகபுரம் 4ஆம் கட்டை பகுதியில் வைத்து   மது போதையில் காணப்பட்ட இளைஞர் குழு தாக்குதல் மேற்கொள்ள முயன்றுள்ளதுடன், அவரின் வாகனத்தினையும் சேதப்படுத்தியுள்ளனா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.


இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (14) இரவு 7 மணியளவில் இடம்பெற்யுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



நேற்று சனிக்கிழமை(14) மாலை மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி வினோநோகராதலிங்கம் வாகனத்தில் பயணித்த
போது வவுனியா கற்பகபுரம் 4ஆம் கட்டை பகுதியில் இரவு 7 மணியளவில் இளைஞர் குழுவொன்று அவரின் வாகனத்தினை வழி மறித்துள்ளனர்.


அதனையடுத்து வாகனத்திலிருந்து வினோநோகராதலிங்கம் கீழே இறங்கி அவ் இளைஞர்களுடன் கலந்துரையாட முற்பட்ட போது மது போதையில் காணப்பட்ட குறித்த இளைஞர்கள் அவா் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளதுடன்  அவரின் வாகனத்தின் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.


-இதன் போது அவருடன் பயணித்த  பிரத்தியோக பாதுகாப்பு உத்தியோகத்தர் வானத்தை நோக்கி  துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதனையடுத்து மது போதையில் காணப்பட்ட குறித்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து இதுதொடா்பில் வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதனையடுத்து குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதி பூவரசங்குளம் காவல்துறைப் பிரிவு என்பதனால் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்த பூவரசங்குளம் காவல்துறையினா்  சந்தேகத்தின் பேரில் மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பூவரசங்குளம் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர். #வினோநோகராதலிங்கம் #தாக்குதல் #கைது #வவுனியா #மதுபோதை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More