இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மொரட்டுவையைச் சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 10 ஐச் சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவரும் கொழும்பு 13 ஐச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என ாபிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது #இலங்கை #கொரோனா #உயிரிழப்பு