Home இலங்கை மனைவியை எரித்துக் கொலை செய்தவருக்கு மரண தண்டனை

மனைவியை எரித்துக் கொலை செய்தவருக்கு மரண தண்டனை

by admin

திருகோணமலையில் மனைவியை எரித்துக் கொலை செய்தவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் மரண தண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதியன்று கந்தளாய்-அக்போபுர பகுதியில் மனைவியை எாித்து கொலை செய்த திருகோணமலை – ஆண்டாங்குளம் பகுதியை சேர்ந்த 38 வயதான நபா் ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொலை தொடர்பில் சந்தேகநபருக்கெதிராக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியதால், நீதிபதி இவ்வாறு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். #திருகோணமலை #மனைவி #எரித்துக்கொலை #மரணதண்டனை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More