டுபாயிலிருந்து செயற்படும் போதைப்பொருள் வர்த்தகர்கள் தொடர்பில் விசேட விசாரணைகளை காவற்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
டுபாயிலிருந்து வழிநடத்தப்படும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பெண்ணும் அடங்கியுள்ளார். இவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.