Home இலங்கை சித்திரவதை செய்பவர்களை தண்டிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது

சித்திரவதை செய்பவர்களை தண்டிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது

by admin

காவல்துறையினர் உள்ளிட்ட அரச பாதுகாப்பு அமைப்புகளால் கொடூரமாக சித்திரவதை செய்யப்படுவதால் ஏராளமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வரும் இலங்கையில் சித்திரவதைக்கு எதிரான சட்டத்தை கடுமையாக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.

அரசியலமைப்பின் 11ஆவது பிரிவு சித்திரவதை மற்றும் பிற மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான செயற்பாடுகள் அல்லது தண்டனையை வெளிப்படையாக தடை செய்கிறது.

இதுபோன்ற செயல்களைச் செய்பவர்களைக் கண்டிப்பதோடு, முடிந்தவரை தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு குறிப்பிடுகிறது.

எனவே, தற்போது நடைமுறையிலுள்ள 1994 ஆம் ஆண்டு 22ஆம் இலக்க மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான செயற்பாடுகள் அல்லது தண்டனைக்கு ஆளாக்குவதற்கு எதிரான சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டப்பணம் சமகாலத்திற்கு ஏற்புடைய வகையில் திருத்தம் செய்வதற்கான தேவை உணரப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

அதற்கான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக சட்டமூல வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி அமைச்சர் நேற்றைய தினம் (14) சமர்ப்பித்த யோசனைக்கு  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சித்திரவதைக்கு எதிரான லண்டனை தளமாகக் கொண்ட சர்வதேச அமைப்பான “ப்ரீடம் ப்ரொம் டோர்ச்சர்” இந்த ஆண்டு பெப்ரவரியில் வெளியிட்ட அறிக்கைக்கு அமைய, கடந்த எட்டு வருடங்களில், வைத்திய மற்றும் சட்ட உதவிக்காக அனுப்பப்பட்டவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் இலங்கையிலிருந்து வந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. #சித்திரவதை #தண்டனை #அரசாங்கம் #கவனம் #மனிதாபிமானமற்ற

Spread the love
 
 
      

Related News

1 comment

Logeswaran December 15, 2020 - 4:34 pm

கடுமையான வேதனையையோ (வலியையோ) அல்லது துன்பத்தையோ ஒருவருக்கு தண்டனையாக அல்லது ஏதாவது செய்ய அல்லது சொல்லும்படி கட்டாயப்படுத்தும் செயல் அல்லது நடைமுறையை சித்திரவதை என்று கூறலாம்.

இலங்கை உட்பட உலகின் பல நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர்.

இதை மாற்றி அமைக்க இலங்கையில் சித்திரவதைக்கு எதிரான சட்டத்தை கடுமையாக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவது வரவேற்கக்கூடியது.

இத்துடன் சித்திரவதை செய்யும் நபர்கள் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளாது சட்டங்களை அமுல்படுத்தி ஏனைய நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More