Home இலங்கை ‘இறந்தவர்களை நினைவு கூரும் நினைவுச் சின்னம்’ அழிக்கப்பட்டமை! யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் (JUTA) கவலை.

‘இறந்தவர்களை நினைவு கூரும் நினைவுச் சின்னம்’ அழிக்கப்பட்டமை! யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் (JUTA) கவலை.

by admin


‘இறந்தவர்களை நினைவு கூரும் நினைவுச் சின்னம்’ அழிக்கப்பட்டமை தொடர்பான ஆசிரியர் சங்கத்தின் கவலை.


எமது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமையப் பெற்றிருந்த இறந்தவர்களை நினைவு கூரும் நினைவுச் சின்னத்தினை கடந்த 08.01.2021 வெள்ளிக்கிழமை அன்று இடித்து அழிக்கப்பட்ட நிகழ்வும் அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக சூழலில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் சம்பவங்களும் பல்கலைக்கழக ஆசிரியர்களாகிய எங்களை மிகவும் மனவேதனைக்கு உட்படுத்தியிருக்கின்றது.


எமது பல்கலைக்கழத்தின் மீது தொடர்ச்சியாக பிரயோகிக்கப்பட்டு வருகின்ற அழுத்தங்கள் பல்கலைக்கழகத்தின் சுயாதீனம் மற்றும் தனித்துவம் என்பவற்றை வெகுவாகப் பாதிக்கின்றமை ஆசிரியர்களாகிய எங்களை மேலும் கவலைக்குட்படுத்துகின்றது.

இது தொடர்பான மேலதிக விடயங்கள் தொடர்பாக விசேட பொதுக் கூட்டத்தில் கலந்துரையாட உள்ளோம்.
……………………… ………………………
கலாநிதி ரி. மனோறஞ்சன்

உப தலைவர் (JUTA)

திரு.எஸ்.எஸ்.உதயகுமார்
பொதுச் செயலாளர் (JUTA)

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More