Home இலங்கை கொலை செய்யப்பட்ட நிலையில் தாயும் மகனும் மீட்பு

கொலை செய்யப்பட்ட நிலையில் தாயும் மகனும் மீட்பு

by admin

வீடொன்றில் கொலை செய்யப்பட்ட  தாயும் அவரது 13 வயது   மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அம்பாறை  மாவட்டம் தமணை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட வரலந்தா கிராமத்தில் உள்ள  வீடு ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள்    வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என   சந்தேகிக்கப்படும்   கூரிய ஆயுதம் ஒன்றை காவல்துறையினா் வீட்டில் இருந்து மீட்டுள்ளனர்.

மேலும் இச்சம்பவமானது  அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கடந்த கால யுத்தத்தில்    ராணுவ அதிகாரியான  கணவனை இழந்த இப்பெண்   தனது  மகனுடன் வாழ்ந்து  வந்துள்ளார்.

இந்நிலையில்   மற்றொரு நபர் சம்பவம் இடம்பெற்ற  வீட்டிற்கு வந்து அந்த பெண்ணுடன் வீட்டில் வசித்து வந்துள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.அத்துடன் சம்பவம் நடந்த நாளில் அந்த நபர் வீட்டிற்கு வந்து மது அருந்தியதாக விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவ தினம் சந்தேக நபர் இறந்த பெண்ணின் தாயை தொலைபேசி ஊடாக அழைத்து திட்டியுள்ளார்.பின்னர் இறந்த பெண்  தனது தாயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை பிரஸ்தாப நபர் துன்புறுத்துவதாகவும் இதனால் மகனை நாளை பாடசாலைக்கு அழைத்து செல்ல முடியாது எனவும் கூறியுள்ளார்.

இதனால் பதற்றமடைந்த இறந்த பெண்ணின் தாய் தொடர்ந்து தொலைபேசி அழைப்புகளை தனது மகளுக்கு மேற்கொண்டார். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை.

இந்தநிலையில்காலையில்  பக்கத்து வீட்டில் இருந்த பெண்  இறந்த பெண்ணின் மகனை பாடசாலைக்கு செல்லாத காரணத்தினால்   விசாரிக்கச் சென்றுள்ளார்.

இதன் போது வீட்டின்  முன்பக்க கதவு மூடப்பட்டிருந்ததால் வீட்டின் பின்னால் இருந்து வீட்டிற்குள் நுழைந்தபோது தாயும்    மகனும் வெட்டுண்ட நிலையில்  இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அயலவர்கள் தமணை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து  பொறுப்பதிகாரி  பிரியந்தா பண்டார சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டார்.

மேலும் குறித்த கொலை குறித்து குற்றவியல் புலனாய்வுத் துறை மற்றும் தமணை காவல்  நிலைய குற்றவியல் புலனாய்வு பிரிவு  இணைந்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

அத்துடன்  கொலையாளியைத் தேட காவல்துறை நாய்கள் வரவழைக்கப்பட்டு  பயன்படுத்தப்பட்டு வருவதுடன்  கைரேகைகள் தடயங்கள் குறித்தும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

சந்தேக நபர்  சம்பவம் இடம்பெற்ற  அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.அவர்  திஸ்ஸமஹராமாவில் வசிப்பவர் என காவல்துறையினா் தெரிவித்தனர்.

 குறித்த சம்பவத்தில் இறந்தவர்கள் பி.ஜி. தினேஷிகா சதமாலி குலரத்னே (33)  அவரது மகன் எஸ்.ஏ.ஸ்ரீமல் சச்சீந்திர லக்ஷன் ரூபசிங்க (13) என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர்   ஜெயந்த ரத்நாயக்கரின் அறிவுறுத்தலுக்கமைய மேலதிக விசாரணைகளை காவல்துறையினா்  மேற்கொண்டு வருகின்றனர். #கொலை #அம்பாறை #தமணை #தாயும் #மகன் #மீட்பு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More