Home இலங்கை ஒரே வீட்டில் 38 மாடுகள் களவாடப்பட்டுள்ளன.

ஒரே வீட்டில் 38 மாடுகள் களவாடப்பட்டுள்ளன.

by admin

காரைநகர் பகுதியில் கடந்த 5 வருடத்தில் ஒரே வீட்டில் 38 மாடுகள் களவாடப்பட்டுள்ளன.  காரைநகர் பகுதியில் மாடுகளை களவாடி இறைச்சியாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பில் காரைநகர் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முறையிடப்பட்டது. 


அதன் போது , காரைநகர் பகுதியில் வசிக்கும் ஒருவரின் வீட்டில் மாத்திரம் கடந்த 5 வருட கால பகுதியில் 38 மாடுகள் களவாடப்பட்டுள்ளன. அது தொடர்பில் ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் எந்த நடவடிக்கைகளும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. 
கால் நடைகள் களவாடப்படுவது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கால் நடை வளர்ப்பாளர்கள் கோரினர்.  #மாடுகள் #களவாட #காரைநகர் #கால்_நடை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More