Home இலங்கை சரத் வீரசேகர என் மீது சட்ட நடவடிக்கை எடுக்கட்டும்

சரத் வீரசேகர என் மீது சட்ட நடவடிக்கை எடுக்கட்டும்

by admin

அமைச்சர் சரத் வீரசேகர தன் மீது சட்ட நடவடிக்கை கட்டாயமாக எடுக்கட்டும் எனவும் அதனை நீதிமன்றத்தில் சந்திப்போம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

க.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரா சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அன்மையில் தெரிவித்திருந்தமை தொடா்பிலேயே அவா் இவ்ாறு தொிவித்துள்ளாா்.

இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே க.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் சட்ட நடவடிக்கை எடுத்தால் அதனை தான் வரவேற்கின்றேன் எனவும் அப்போதுதான் எங்களுடைய பிரச்சினைகளை வெளியில் கொண்டுவரக்கூடிய ஒரு சந்தர்ப்பம் ஏற்படும் எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா். #சரத்வீரசேகர #சட்டநடவடிக்கை #விக்னேஸ்வரன்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More