Home இந்தியா ஈழத் தமிழர்கள் சமத்துவம் – சமநீதி -அமைதி – கண்ணியத்துடன் வாழ மத்திய அரசு நடவடிக்கை:

ஈழத் தமிழர்கள் சமத்துவம் – சமநீதி -அமைதி – கண்ணியத்துடன் வாழ மத்திய அரசு நடவடிக்கை:

by admin

இலங்கையில் ஈழத் தமிழர்கள் சமத்துவம், சமநீதி, அமைதி மற்றும் கண்ணியத்துடன் வாழ்வதற்கான நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு உறுதி செய்து வருகிறது என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளாா். சென்னையில் இன்று பல்வேறு புதிய திட்டப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது அவா் இவ்வாறு தொிவித்துள்ளாா்.

மேலும் இலங்கையில் வாழும் தமிழர்கள் நலனில் மத்திய அரசு அக்கறை கொண்டிருக்கிறது. ஈழத் தமிழர்களின் நலனுக்காக பல்வேறு அபிவிருத்தி பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. வடகிழக்கில் இந்தியா சார்பில் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு 50,000 வீடுகள் கட்டிதரப்பட்டுள்ளன. இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்காக 4,000 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் சுகாதார வசதிகளுடனான அவசர ஊர்திகளும் இந்தியா , ஈழத் தமிழருக்கு வழங்கி உள்ளது. யாழ்ப்பாணத்தில் இந்தியா கட்டி வரும் கலாசார மையம் விரைவில் திறக்கப்பட உள்ளது.

சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே விமான சேவையை ஆரம்பித்துள்ளோம். யாழ்ப்பாணம் – மன்னார் புகையிரத பாதை திட்டத்தை இந்திய அரசு சீரமைத்து கொண்டிருக்கிறது.

அத்துடன் இலங்கையில் ஈழத் தமிழர்கள் சமத்துவமாக, சமநீதியுடனும் அமைதியாகவும் கண்ணியத்துடனும் வாழ்வதை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசு செய்து வருகிறது என பிரதமர் மோடி தொிவித்துள்ளாா்.

அதேவேளை இலங்கை சிறையில் ஒரு தமிழக மீனவர் கூட இல்லை எனவும் அனைவரையும் விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளாா் #ஈழத்தமிழர்கள் #சமத்துவம் #சமநீதி #அமைதி #மோடி #யாழ்ப்பாணம் #மன்னார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More