Home இலங்கை வன்முறை கும்பலால் முச்சக்கர வண்டி தீக்கிரை

வன்முறை கும்பலால் முச்சக்கர வண்டி தீக்கிரை

by admin
ஆவணப்படம்

நவாலி அரசடியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று முச்சக்கர வண்டி ஒன்றுக்கு தீமுட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது . இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது.

இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பலே இந்த அடாவடியில் ஈடுபட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களை வெளிநாட்டிலிருந்து நடத்துபவர் என காவல்துறையினரால் அடையாளப்படுத்துபவரின் வீட்டுக்குள் புகுந்தே முச்சக்கர வண்டிக்கு தீவைக்கப்பட்டது என்று மானிப்பாய் காவல்துறையினர் தெரிவித்தனர்.  

முச்சக்கர வண்டிக்கு தீ மூட்டியதை அடுத்து அப்பகுதி இளைஞர்கள் ஒன்று கூடிய போது குறித்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர். அதன் போது அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள்  ஒன்றினை கைவிட்டு சென்றுள்ளனர். 


மோட்டார் சைக்கிளை மீட்ட இளைஞர்கள் அதனை மானிப்பாய் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதேவேளை , முச்சக்கர வண்டி உரிமையாளரினால் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது. #வன்முறை_கும்பல் #முச்சக்கரவண்டி #தீக்கிரை #நவாலி

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More