
யாழ். நல்லூர் கோவில் வீதியில் இன்று (சனிக்கிழமை) காலை சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த முதியவர் மயக்கமடைந்த நிலையில், நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார் .
கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 75 வயதுடைய நபரே இவ்வாறு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்
உயிரிழந்தவர் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
மேலும் உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் மரக்கறி கடை நடாத்துபவர் என்றும் இன்று காலை வீட்டில் இருந்து மரக்கறி வாங்க திருநெல்வேலி பொதுச் சந்தைக்கு சைக்கிளில் சென்றதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர். #யாழ் #நல்லூர்கோவில் #திருநெல்வேலி_பொதுச்சந்தை #உயிரிழப்பு
Spread the love
Add Comment