Home இலங்கை உறவுகளது வேதனை பற்றிஅமெரிக்கத் தூதுவர் ‘ருவீற்’

உறவுகளது வேதனை பற்றிஅமெரிக்கத் தூதுவர் ‘ருவீற்’

by admin

கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ் (Alaina B. Teplitz) வடக்கில் காணாமற்போனவர்களது குடும்பத்தினர்களைச் சந்தித்து உரையாடியது குறித்து தனது ருவீற்றர் பக்கத்தில் படங்களுடன் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பமாகி உள்ள தருணத்தில் போரால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு யாழ்ப்பாணப் பகுதிக்கு சென்றுள்ள அவர் அங்கு காணாமற் போனவர்களது குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்தார்.

“உங்கள் மகனையோ உங்கள் கணவரையோ இழப்பது குறித்துக் கற்பனை செய்து பாருங்கள். தங்கள் உறவுகளுக்கு என்ன ஆனது என்பது பற்றி எதுவுமே தெரியாதவர்கள் அனுபவிக்கின்ற வேதனை அப்போது உங்களுக்குப் புரியும். பொறுப்புள்ள ஓர் அரசுக்கு பாதிக்கப்பட்டோரது காயங் களை ஆற்றவேண்டிய கடமை இருக்கி றது” உறவினர்களுடனான சந்திப்பின் பின்னர் இவ்வாறு அமெரிக்கத் தூதர் தனது ருவீற்றர் பதிவில் எழுதியிருக் கிறார். #அமெரிக்கத்_தூதுவர் #ருவீற் #பாதிக்கப்பட்ட #காணாமற்போனவர்களது #வேதனை

—————————————————————

குமாரதாஸன். பாரிஸ்.24-02-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More