Home இலங்கை “சண் அங்கிள்” இல்லாது போனார்…

“சண் அங்கிள்” இல்லாது போனார்…

by admin

“சண் அங்கிள்” என்று அன்பாய் அனைவராலும் அழைக்கப்படும் மூத்த ஊடகவியலாளர் சண் சண்முகராஜா, தனது 85 ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் இன்று (02.03.21) காலமானார்.

தினபதி , சிந்தாமணி , வீரகேசரி ஆகிய தேசிய பத்திரிகைகளில் கடமைபுரிந்த இவர், மூத்த ஊடகவியலாளராக அனைவராலும் கௌரவிக்கப்பட்டார்.

இவர், கலை இலக்கிய மற்றும் சினிமா விடயங்களில் மிகவும் ஆர்வமாக்கவர். அதனால் அவரை, இலங்கை தமிழ் ஊடக வரலாற்றில் “சினிமா விக்கிபிடியா” என்றும் பலரும் அழைப்பர்.

“சண் அங்கிள்”, சகலருடனும் நெருக்கமாக பழகுவார். அவருடைய எழுத்துக்கள் எவ்விதமான திருத்தங்களுக்கும் உட்படுத்தப்படா​மலே அச்சுக்கு செல்லுமெனவும் அந்தளவுக்கு பத்திரிகை ஆசிரியருக்கும் ஆசிரியர் பீடத்துக்கும் மிகவும் விசுவாசமாகவும் நம்பிகையுடனும் திகழ்ந்துள்ளார்” எனவும் அவரது நன்பர்கள் அவரை நினைவுகூருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More