Home இலங்கை இலங்கையை கண்காணிக்க, புலனாய்வாளர்களையும், சட்ட ஆலோசகர்களையும் ஐநா நியமிக்க உள்ளது!

இலங்கையை கண்காணிக்க, புலனாய்வாளர்களையும், சட்ட ஆலோசகர்களையும் ஐநா நியமிக்க உள்ளது!

by admin


சட்ட ஆலோசகர்களையும் புலனாய்வாளர்களையும் இலங்கை தொடர்பாக ஆராய ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் நியமிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நேற்று செவ்வாய்க்கிழமை (23.03.21) நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், இலங்கையை உன்னிப்பாகக் கண்காணிக்கும் பணியை, ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் ஆரம்பிக்க உள்ளதாகவும், அதற்கமைவாக இலங்கையில் பணிபுரிய 12 புதிய ஊழியர்களை நியமிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அவர்களில் சர்வதேச குற்றவியல் நீதி – குற்றவியல் விசாரணைகள், அணியை ஒருங்கிணைத்து தகவல் மற்றும் சான்றுகள் சேகரிக்கும் தகுதியுடைய ஆய்வாளர்கள், புலனாய்வாளர்கள், மனித உரிமை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட தரப்பினை மேற்பார்வையிடுவதற்கான அனுபவமுள்ள சட்ட ஆலோசகர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலின் முன்னேற்றம் உட்பட, இலங்கையில் மனித உரிமைகளின் நிலைமை குறித்த அதன் கண்காணிப்பு மற்றும் அறிக்கையை மேம்படுத்த, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More