77
யாழ்ப்பாணம், புத்தூர் வீரவாணி பகுதியில் தனிமையில் வசித்த ஆண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அச்சுவேலி காவல்துறையினா் தெரிவித்தனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை)அதிகாலை ஒரு மணியளவில் அவரது வீட்டுக்கு அருகில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதே இடத்தைச் சேர்ந்த துரைராசா சந்திரகோபல் (வயது-52) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் இருந்த பழைய பகையை வைத்து சிலர் இந்தக் கொலையைச் செய்துள்ளனர் என்று ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் காவல்துறையினா் தெரிவித்தனர் #யாழ்ப்பாணம் #புத்தூர் #வெட்டிக்கொலை
Spread the love