Home இலங்கை விடுதலைப் புலிகளை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட இருவா் கைது

விடுதலைப் புலிகளை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட இருவா் கைது

by admin

யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மேம்படுத்தும் வகையில், இணையத்தளம் மற்றும் யூாியூப் சனலில் தகவல்களை பதிவேற்றிய இருவரை, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் வைத்து கைதுசெய்துள்ளனா் என காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளாா்.

யாழ் நகரில் குறித்த இணையத்தளம் மற்றும் யூாியூப் சனலை நடத்திய இடம் அடையாளம் காணப்பட்டு இன்று சோதனைக்குள்ளாக்கப்பட்ட போது அந்த இடத்துக்கு பொறுப்பாக இருந்த 35 வயதான பெண் ஒருவரும் 36 வயதான ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தொிவித்துள்ளாா்.

அத்துடன், 05 கணினிகள் 05 மடிக்கணினிகள் உள்ளிட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை கொழும்புக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹண தொிவித்துள்ளாா். #யாழ்ப்பாணத்தில் #விடுதலைப்புலிகளை #கைது #இணையத்தளம் #யூாியூப் #அஜித்ரோஹண

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More