Home இலங்கை இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தோர் என எவரும் கிடையாது!

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தோர் என எவரும் கிடையாது!

by admin

இலங்கையில் இருந்து மக்கள் எவரும் பலாத்காரமாக  வெளியேற்றப்படவில்லை அதனால்  புலம் பெயர்ந்தோர்  என எவரும் இல்லை. அவ்வாறு கூறுவதனை  ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில, புலம்பெயர் என்ற சொல்லை இலங்கை அங்கீகரிக்கவில்லை எனவும் வலியுறுத்தி உள்ளார்.

வெளிநாட்டவர்களுடனான, நெருக்கமான உறவுகளை அரசாங்கம் தொடர்ந்தும்  பேணும். எனினும் புலிகளின் சித்தாத்தங்களை அல்லது பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் அனைத்து குழுக்களையும் அரசாங்கம் தடை செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் அரசியலமைப்பின் கீழ் பிரிவினைவாதம் தடை செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், புலிகள் அமைப்பும் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளதாக  அமைச்சர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சில அமைப்புகள் உட்பட பல தமிழ் புலம்பெயர் அமைப்புகளை , 2012 ஆம் ஆண்டின் ஐ.நா. ஒழுங்குமுறை எண் 1 (4) இன் கீழ், அரசாங்கம் தடை செய்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு சில குழுக்கள் தடை செய்யப்பட்டபோதும்,  தடைசெய்யப்பட்ட அமைப்புகள் சிலவற்றினதும், தனி நபர்கள் சிலரது பெயர்களும் தடைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More