Home சினிமாஇயக்குனர் தாமிரா கொரோனாவால் உயிாிழப்பு

இயக்குனர் தாமிரா கொரோனாவால் உயிாிழப்பு

by admin

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் தாமிரா, இன்று காலை சிகிச்சை பலனின்றி தனது 53வது வயதில் உயிரிழந்துள்ளாா்.

மறைந்த இயக்குனர் கே பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய தாமிரா இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘ரெட்டைச் சுழி’ என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே தமிழ் சினிமாவின் இரண்டு உச்ச இயக்குனர்களான பாலச்சந்தர் மற்றும் பாரதிராஜாவை சேர்த்து நடிக்க வைத்து கவனம் ஈர்த்தார். இதன்பின் சமுத்திரகனி, ரம்யா பாண்டியன் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘ஆண் தேவதை’ படத்தை இயக்கியிருந்தார் தாமிரா.

அண்மையில் இயக்குனர் தாமிராவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று காலை, இயக்குனர் தாமிரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More