Home இலங்கை காரைநகரில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது

காரைநகரில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது

by admin

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் வீடொன்றில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  காரைநகர் ஊரி பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக அப்பகுதி கிராம சேவையாளரான மயூரனுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , அது தொடர்பில் காவல்துறையினருக்கு அறிவித்து , காவல்துறையினருடன் வீட்டினை முற்றுகையிட்டு தேடுதல் நடத்தினர். 


அதன் போது வீட்டினுள் அறை ஒன்றினுள் கசிப்பு உற்பத்தி இடம்பெற்றதை கண்டறிந்து , வீட்டில் இருந்தவரை கைது செய்தனர். அத்துடன் கசிப்பு உற்பத்தி பயன்படுத்திய பொருட்களையும் மீட்டனர். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை காவல்துறையினர் மேலதிக  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More