Home இலங்கைவல்லையில் கசிப்பு உற்பத்தி முறியடிப்பு – மூவர் கைது

வல்லையில் கசிப்பு உற்பத்தி முறியடிப்பு – மூவர் கைது

by admin

வடமராட்சி வல்லை வெளி களப்பு பகுதியில் உள்ள பற்றைக்குள் மேற்கொள்ளப்பட்டு வந்த கசிப்பு உற்பத்தியில் நடவடிக்கை நேற்று மாலை முறியடிக்கப்பட்டுள்ளது.  அச்சுவேலி காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த இடத்தை காவல்துறையினர். சுற்றி வளைத்த போதிலும் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த நபர் அங்கிருந்த்து தப்பி சென்றிருந்தார். 

அந்நிலையில் காவல்துறையினரினால் சந்தேக நபரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 4 லீற்றர் 500 மில்லி லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டது. அதனால் வீட்டில் இருந்த தாய், தந்தை மற்றும் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் கசிப்பை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டனர்.


அத்துடன், கசிப்பு உற்பத்தி செய்ய முற்பட்ட இடத்தில் 4 பரல்களில் 4 லீற்றர் 750 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டடுள்ளது.  இதேவேளை தப்பி சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More