Home இலங்கை கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த தொழிலாளிக்கு கொரோனா

கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த தொழிலாளிக்கு கொரோனா

by admin

கட்டட வேலையில் ஈடுபட்ட போது, மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்த தொழிலாளிக்கு கொரோனா  நோய்த் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

அச்சுவேலியில் நேற்று  நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டைச் சேர்ந்த நவரத்தினம் அன்ரன் ஜெயராஜா (வயது-36 ) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார். கட்டடத்தின் மேல் தளத்தில் சன்செட்டுக்கு தூண் போடும் பொழுது தவறி கீழே வீழ்ந்த அவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் அவரின் சடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதனால் அவரது சடலம் யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் மயானத்தில் மின்தகனம் செய்யப்படவுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More