மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.
மார்ச் 9ஆம் திகதியன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அசாத் சாலிக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது